நோயாளிகள் அவதி

Update: 2024-04-07 12:25 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் மற்ற நேரங்களில் உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் திடீரென விஷ ஜந்துக்கள் கடித்தாலோ அல்லது கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலோ அவர்களை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்