நாய்கள் தொல்லை

Update: 2024-04-07 10:44 GMT

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம்-பாபநாசம் சாலை மற்றும் திருமலைராஜன் ஆற்றின் கரை பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மேற்கண்ட பகுதிகளில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்