நாய்கள் தொல்லை

Update: 2024-04-07 10:44 GMT

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. இவை சிகிச்சைக்கு வருபவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்கள், உடைகளை இழுத்து செல்கின்றன. ஆஸ்பத்திரிக்கு வருபவர்களை துரத்தி செல்கின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் அங்கும், இங்கும் உலா வருகின்றன. இதனால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்