நூலகம் திறக்கப்படுமா?

Update: 2024-03-31 18:00 GMT

உடன்குடி யூனியன் செம்மறிக்குளம் ஊராட்சி கல்விளை அம்பேத்கர் நகரில் உள்ள பொதுநூலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் பூட்டி கிடக்கிறது. அதில் ரூ.1 லட்சம் மதிப்பிற்கு மேலான புத்தகங்கள் இருக்கின்றன. பலமுறை ஊராட்சி நிர்வாக்திடம் முறையிட்டும் நூலகத்தை மராமத்து செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு கட்டிடத்தை புதுப்பித்து, நூலகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்