புதுச்சத்திரம் அருகே நேந்திரக்கிள்ளையில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை சூறையாடி வருகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரங்களில் கடிக்க விரட்டுகின்றன. இதை தவிர்க்க குரங்குகளை பிடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.