டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

Update: 2024-03-31 17:17 GMT
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் நகர் விரிவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மதுவாங்கி குடிப்பவர்கள் போதை தலைக்கேறியதும் சாலையில் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி செய்து தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த பகுதி வழியாக பெண்கள் செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்