குடும்ப அட்டைதாரர்கள் கவலை

Update: 2024-03-31 14:38 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வாசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் வகையில், இப்பகுதியில் ரேஷன் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்