தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-31 14:35 GMT

அரியலூர்-செந்துறை சாலையில் இரவு, பகலாக தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மேலும் அங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்