புதர்கள் வெட்டி அகற்றப்படுமா?

Update: 2024-03-24 13:00 GMT

நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கூடலூர்-ஓவேலி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. அங்குள்ள சாலையோர புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளதால், வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்