மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-03-24 12:13 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் -தேளூர் ஆகிய 2 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்டது வி. கைகாட்டி கிராமம் . இந்த வி. கைகாட்டி வழியாக தினமும் எண்ணற்ற லாரிகள் மற்றும் பல்வேறு கனரக வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. இந்நிலையில் வி. கைகாட்டியில் 24 மணி நேரமும் அதிகளவில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் ,இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றி திரிகிறது. இதனால் வாகனங்களில் மாடுகள் மீதும் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்