சுகாதார சீர்கேடு

Update: 2024-03-24 10:13 GMT

தஞ்சை மேலவெளி ஜெபமாலைபுரம் புதுத்தெருவில் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கழிவுநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுநீரில் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு எற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்