பராமரிப்பில்லாத குடிநீர் குழாய்

Update: 2024-03-24 10:13 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் பாலக்கரை மிஷின் தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாய் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. இதன்காரணமாக குடிநீர் குழாயை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. குப்பைகள் குவிந்து கிடப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. இவற்றால் பொதுமக்கள் குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை முறையாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்