நாய்கள் தொல்லை

Update: 2024-03-17 14:53 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை அவ்வப்போது வார்டு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் சிகிச்சைக்காக வருபவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். ஆஸ்பத்திரிக்கு வருபவர்களை நாய்கள துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்