மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2024-03-17 14:31 GMT

பெரம்பலூர் பழைய மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் அமர்ந்து கொண்டு மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் இந்த நடைபாதையில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்