சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2024-03-17 12:07 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மிக பிற்படுத்தப்பட்டோர் மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மழைக்காலத்தின்போது இடிந்து கீழே விழுந்துவிட்டது. எனவே இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் மீண்டும் அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்