உடைந்து விழ காத்திருக்கும் நிழற்குடை

Update: 2024-03-17 11:09 GMT

கூடலூரில் உள்ள மாக்கமூலா பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடம் உடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்