மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?

Update: 2024-03-10 16:57 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் கொங்கணாமூர் காலனியில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி அந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. ஆனால் இந்த பணி முழுமையாக முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை முழுமையாக இடித்து அகற்ற வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்