ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக கண்மாய் பகுதிகளை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.