ஆபத்தான கழிவறை

Update: 2024-03-10 12:28 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழூர் நான்கு ரோட்டில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவறை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனேயே பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் பயன்பாட்டின்போது இந்த கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்தால், உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்