வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரைகள்

Update: 2024-03-10 11:59 GMT

கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் வாய்கால் தண்ணீர் வாங்கல் வரை செல்லுகிறது. இதனால் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அதிக அளவில் முளைத்துள்ளதால், தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்