நாய்கள் தொல்லை

Update: 2024-03-10 11:57 GMT

தஞ்சை தொல்காப்பியர்சதுக்கம் சேவியர் நகர், நாகம்மாள்நகர் ஆகிய பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக அங்கும்,இங்கும் உலா வருகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்