நர்சுகள் பற்றாகுறை

Update: 2024-03-03 14:05 GMT

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த சுகாதார நிலையத்தில் நர்சுகள், ஊழியர்கள் பற்றாகுறை உள்ளது. இதனால் மருந்துகள் வாங்குவதற்கு நோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்க எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்