குரங்குகள் தொல்லை

Update: 2024-03-03 12:41 GMT


தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்படி கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை குரங்குகள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேகரன், தொண்டராயன் பாடி

மேலும் செய்திகள்