வண்டல் மண் அள்ள அனுமதி வேண்டும்

Update: 2024-03-03 11:44 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதால் அதிக ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்த சூழலில் ஏரியை ஆழப்படுத்தினால், மழைபெய்யும்போது மழைநீரை அதிக அளவில் சேகரிக்க முடியும். மேலும் விவசாயிகள் அந்த ஏரியில் வண்டல் மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்