செயல்படாத சுங்கச்சாவடி

Update: 2024-03-03 11:44 GMT

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் பேரளி கிராமத்தில் செயல்படாத சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த சுங்கச்சாவடியில் உள்ள வேக தடைகளால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாக ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் இந்த வேகத்தடையை கடக்கும்போது ஜல்லிகற்கள் கீழே கொட்டி வருகிறது. இதனால் மற்ற வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆகிய வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்