பொதுமக்கள் அவதி

Update: 2024-02-25 12:47 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி காவல்சேரி வெளிவட்ட சாலை அருகில் நீர் நிலை ஒன்று உள்ளது. இதில் கழிவுநீர் கலக்கப்படுவதுடன் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைகின்றனர். மேலும், சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனேவ, கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்