குரங்குகள் தொல்லை

Update: 2024-02-25 11:52 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வழுத்தூர் கிராமம் ஹாஜியார் தெருவில் குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், செல்போன்களை தூக்கி செல்கின்றன. மரங்களில் ஏறி அட்டகாசம் செய்கின்றன. சாலையில் அங்கும்,இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் குரங்குகள் விரட்டுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்