நாய்கள் தொல்லை

Update: 2024-02-25 11:50 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருபாலைத்துறை வடக்கு மடவிளாகம் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்