பூட்டிக்கிடக்கும் நூலகம்

Update: 2024-02-18 17:08 GMT
ரிஷிவந்தியம் அருகே பாக்கம் அரசு பள்ளி அருகில் நூலகம் உள்ளது. இந்த நூலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. இருப்பினும் அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நூலகம் பூட்டியே கிடப்பதால் அதனை அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நூலகம் யாருக்கும் பயனின்றி காட்சி பொருளாக தற்போது உள்ளது. எனவே நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்