விருதுநகர் மாவட்டம் புல்லக்கவுண்டன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்ப்பகுதிக்குள் செல்லும் பாதையில் தெருவிளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்த பாதையின் வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?