வேகத்தடைகள் அமைக்கலாமே !

Update: 2024-02-11 17:15 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் ஆண்டகலூர்கேட் நிறுத்தத்தை அடுத்து தோனமேடு மற்றும் பாலப்பாளையம் ஆகிய இரு பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இவ்விடத்தில் 4 வழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வேகத்தடைகள் இல்லாததால் வேகமாக வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த இடத்தில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்