தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-02-11 14:08 GMT

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி ஊராட்சி, சந்தனகாளிபாளையம் பகுதியில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேற்கூரை, அமரும் இடம் பணிகள் செய்யப்பட்டு, மேலும் சில பணிகள் முழுமையாக முடியாமல் உள்ளது. தரை மட்ட பகுதியில் சிமெண்டு தளம் அமைக்கப்படாமல், அதற்கு வேண்டிய சிமெண்டு கலவைகள் கொட்டி வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகளை நிறைவு செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்