நம்புங்க... இது பேரூராட்சி அலுவலகம் தான்

Update: 2024-02-04 13:50 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதிய கட்டிட வசதி இல்லை. இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை வைக்க இடமில்லாமல் பேரூராட்சி அலுவலகம் முன்பு அடுக்கி வைத்துள்ளனர். இதன் காரணமாக பேரூராட்சிக்கு அதிகாரிகள், பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மழை பெய்யும் போது நெல்மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்