பிரேத பரிசோதனை கூடத்துக்கு பணி ஆட்கள் தேவை

Update: 2024-01-28 17:48 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை கூடத்தில் இதுவரை பணி ஆட்கள் இல்லாமல் உள்ளனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் உள்ளது. இதற்காக ஆத்தூர், சேலம் பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அலைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே வாழப்பாடி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஊர்பொதுமக்கள், வாழப்பாடி.

மேலும் செய்திகள்