நாய்கள் தொல்லை

Update: 2024-01-28 14:02 GMT

நாகை மாவட்டம் ஆதலையூர் மதினாநகர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நாய்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்