பயன்பாட்டிற்கு வராத நவீன கழிவறை

Update: 2024-01-28 13:25 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் நலன் கருதி இந்த பஸ் நிலையத்தில் நவீன கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவறை அமைக்கப்பட்டு தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்