சாலையோரம் ஆபத்தான தரைமட்ட கிணறு

Update: 2024-01-28 11:01 GMT

மெஞ்ஞானபுரம் கோவிந்தம்மாள்புரத்தில் இருந்து மாணிக்கபுரம் செல்லும் சாலையோரம் கடந்த மாதம் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது தண்ணீர் அரித்து சென்றதால், அங்குள்ள தரைமட்ட கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அந்த வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயும் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்