வழிப்பறி சம்பவங்கள்

Update: 2024-01-28 10:06 GMT

சூலூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் நீலாம்பூர் பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களை மறித்து செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்களால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில், தாக்குதல் சம்பவங்களும் நடக்கிறது. எனவே இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் செய்திகள்