இடிந்து விழும் நிலையில் சமுதாய கூடம்

Update: 2024-01-21 13:18 GMT

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் மாப்படுகை ஊராட்சி பிடாரிகோவில் எதிரில் சமுதாய கூடம் அமைக்கப்பட்டது. அந்த பகுதி மக்களுக்கு இந்த கட்டிடம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. சமுதாய கூடம் பராமரிப்பின்றி போனதால் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. செடி,கொடிகள் வளர்ந்து பாசிபிடித்து காணப்படுவதால் கட்டிடத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சமுதாய கூடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்