நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் கூட்டமாக நிற்கும் நாய்கள்

Update: 2024-01-21 09:53 GMT

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. குறிப்பாக நொய்யல் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சாலையில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. இதனால் பணி முடிந்து இரவு நேரம் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள சாலை வழியாக செல்வோரை நாய்கள் துரத்துகிறது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் ஆற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே குறைந்த பட்சம் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்