சிதிலமடைந்த கட்டிடம்

Update: 2024-01-14 12:25 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் முன்பு பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து இந்த பத்திரப்பதிவு அலுவலகம் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டநிலையில், பழைய கட்டிடம் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடைந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்