பழுதடைந்த ஏ.டி.எம். எந்திரங்கள்

Update: 2024-01-14 08:24 GMT
நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பழுதடைந்த ஏ.டி.எம். எந்திரங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வெளியூர் பயணிகள் அவசரத்துக்கு ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த ஏ.டி.எம். எந்திரங்களை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்