கொசுக்கள் உற்பத்தி

Update: 2024-01-07 17:27 GMT

 பழனி தாலுகா பாப்பம்பட்டி வடக்குதெருவில் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்