பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2024-01-07 16:16 GMT

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

திருப்பூர் சூரியன் நகர் பகுதியில் தென்னம்பாளையம் செல்லும் சாலையோரம் சூரியன் நகர், தெற்கு தோட்டம் பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டும் போதே குடிநீர் வசதி இல்லாமல் கட்டப்பட்டது. இதனால் சிறிது காலம் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் சப்ளை செய்யப்படாமல் சுகாதார வளாகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று மாநகராட்சி சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறந்து சீரமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

குமார்,திருப்பூர்

8976736375

மேலும் செய்திகள்