மயான கொட்டகை அமைக்கப்படுமா?

Update: 2024-01-07 15:06 GMT

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் உடலை தகனம் செய்ய இப்பகுதியில் மயான கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இறந்தவரின் உடலை அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் வைத்து தகனம் செய்து வருகின்றனர். இதனால் மழை பெய்யும் போது, மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்