செங்கல்பட்டு மாவட்டம், 56-வது வார்டு பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. அந்த தபால் நிலையம் பகுதி நேரமாக காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் அதிகமான மக்கள் இருப்பதால் பகுதி நேர தபால் நிலையம் மூடிய பின், 5 கிலோ மீட்டர் தொலைவு கடந்து தபால் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி பகுதி நேர தபால் நிலையத்தை, ழுழு நேர தபால் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.