பழுதான நிழற்குடை

Update: 2024-01-07 11:42 GMT

கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பள்ளிப்பாடி என்ற இடத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் அதன் மீது புதர்கள் படர்ந்து உள்ளதால், விஷ பூச்சிகள் பதுங்கி வருகின்றன. இதனால் நிழற்குடைக்குள் செல்லவே பயணிகள் அச்சம் அடைகின்றனர். மேலும் எப்போது வேண்டுமானாலும் நிழற்குடை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அந்த நிழற்குடையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்