தெருநாய்களால் தொல்லை

Update: 2023-12-24 17:02 GMT

தெருநாய்களால் தொல்லை

திருப்பூர் குமரன் ரோடு,போலீஸ் குடியிருப்பு பகுதி மற்றும் வாலிப்பாளையம் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் உலாவி வருகின்றன. இந்த நாய்கள் அப்பகுதியில் இ்ரவு நேரத்தில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்தி கடிக்கிறது. குறிப்பாக சிறுவர்-சிறுமிகளை விட்டு வைப்பதில்லை.துரத்தி கடிக்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து ஊருக்கு வெளியே கொண்டு சென்று விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செல்வம், திருப்பூர்.

89677 65658

மேலும் செய்திகள்