வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2023-12-17 17:03 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள், பஸ்கள் அதிவேகமாக வந்து செல்கின்றன. இந்த சாலையில் இருந்து கூனவேலம்பட்டி புதூருக்கு திரும்பும் தோனமேடு பஸ் நிறுத்தம் மற்றும் பாலப்பாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் வேகத்தடைகள் இல்லை. எனவே இந்த பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்