நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-17 16:31 GMT

ஆத்தூர் தாலுகா அக்கரைப்பட்டியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்வாயை சுற்றி கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்